Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உக்ரைன் நாட்டு அகதிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற தவறுதலாக உத்தரவு

உக்ரைன் நாட்டு அகதிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற தவறுதலாக உத்தரவு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதியானது 7 நாட்களுக்குள் காலவதியாகிவிடும் எனவும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் கடந்த ஏப்.3ஆம் திகதியன்று அமெரிக்க அரசினால் மின்னஞ்சல் மூலம் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவினால், அங்குள்ள உக்ரைன் மக்களிடையில் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில் நிர்வாகக் கோளாறு காரணமாக இந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் அவ்வாறு எந்தவொரு உத்தரவும் அவர்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

நிர்வாகக் கோளாறினால் இந்த உத்தரவானது உக்ரைன் அகதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்து உடனடியாக அவர்களது அனுமதியின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மற்றொரு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சியில் உக்ரைன் அகதிகள் அந்நாட்டில் வசிக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

இதைப்பற்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களுடன் பேசுகையில், அமெரிக்காவில் வாழும் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைப் பற்றி தற்போது அரசு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை, ஆனால் அதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.