Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நீதிமன்ற வழக்கு ஆவணங்களை திருடிய நீதிமன்ற ஊழியர் உட்பட இருவருக்கு  விளக்கமறியல் நீடிப்பு

மட்டு நீதிமன்ற வழக்கு ஆவணங்களை திருடிய நீதிமன்ற ஊழியர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் இருந்து வழக்கு ஆவண கோப்பு ஒன்றை திருடி அதில் இருந்த வாகன பதிவு ஆவணத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி திரும்பவும் பதிவேட்டு அறையில் வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீதிமன்றில் கடமையாற்றி வந்த சிற்றூழியர் ஒருவரையும் மணல் வியாபாரி உட்பட இரு வரையும் தொடர்ந்து எதிர்வரும் 21 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு நீதிமன்றம் கடந்த (07ம்) திகதி உத்தரவிடுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த நீதிமன்ற பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த 4 ஆவணக் கோப்புக்கள் கொண்ட ஆவணங்கள் திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருட்டுப் போன வாகன வழக்கு தொடர்பான ஆவணக் கோப்பு அடங்கிய ஆவணங்களை அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் மணல் வியாபாரியுடன் இணைந்து அந்த வழக்கு ஆவணக் கோப்புக்களை அங்கிருந்து திருடிச் சென்று அந்த ஆவணக் கோப்பில் இருந்த ஆவணங்களை எடுத்துவிட்டு அதில் தனது பெயருக்கு மாற்றிய வாகன பதிவு ஆவணங்களை வைத்து மீண்டும் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த ஊழியரையும் மணல் வியாபாரியையும் கடந்த மாச் 12ம் திகதி கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை கடந்த 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்காக கடந்த 7ம் திகதி நீதிமன்றில் இருவரையும் ஆஜர்படுத்திய போது வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் இருவரையும் மீண்டும் எதிர்வரும் 21 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யாவில் பாலம் இடிந்து ரயில் தடம்புரண்டதில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
உலக செய்திகள்

ரஷ்யாவில் பாலம் இடிந்து ரயில் தடம்புரண்டதில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

June 2, 2025
காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
செய்திகள்

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 2, 2025
சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்
உலக செய்திகள்

சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

June 2, 2025
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்
செய்திகள்

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்

June 2, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

June 2, 2025
கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது
செய்திகள்

கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது

June 2, 2025
Next Post
வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம்; கருணா பங்கேற்பு

வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம்; கருணா பங்கேற்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.