ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்ற அந்த ரயில் பிரையன்ஸ்க் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கிருந்த மேம்பாலம் தண்டவாளத்தின் மீது திடீரென இடிந்து விழுந்தது.

இதனை எதிர்பாராமல் சென்ற ரயில் இடிபாடுகள் மீது மோதி தடம் புரண்டது. தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும் இந்த சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
30-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.