நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) மாலை வேளையில் அல்லது இரவு நேரங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழையுடனான வானிலை காணப்படும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாளை நண்பகல் 12.10க்கு நெடுந்தீவு, பூநகரி, ஆனையிறவு, மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்குச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.