கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4,000 மீற்றர் நீளமான நைலோன் வலைகளை கந்தளாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கந்தளாய் குளப்பகுதியில் நேற்று மாலை சிலர் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4,000 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








