Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் உரிய மாணவியிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஜூலை 25ஆம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தில் பெறுமதியான தங்க நகை ஒன்று கிடந்த நிலையில், அதனை கலை கலாசார பீடத்தின் மொழித்துறையில் விசேட தரத்தில் கல்வி கற்றுவரும் வேருவலை, தர்கா நகரைச்சேர்ந்த எம்.ஏ.பி. அப்றா என்ற மாணவி கண்டெடுத்துள்ளார்.

குறித்த நகையை அவர் எவ்வித தயக்கமுமின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னாவிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் அது பதிவாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், நகையின் உரிமையாளரை அடையாளம் கண்டு அவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் பதிவாளர் மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த தங்க நகையின் உரிமையாளர் பொத்துவிலைச் சேர்ந்த மு.அ. பாத்திமா அன்பால் என அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, இன்று (2026.08.11) நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த நகை உரிய மாணவியிடம் உத்தியோகபூர்வமாக மீளக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பிரதி பதிவாளர் எப்.பாரிஷா எம். ஹசன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அகமட் அஸ்ஹர் விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா மற்றும் மாணவியின் தந்தை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நகையின் உரிமையாளரான மாணவி, தாம் தொலைத்த பெறுமதியான நகையை நேர்மையாகக் கண்டெடுத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்த எம்.ஏ.பி. அப்றா என்ற மாணவிக்கும், அதனை உரியவரிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பெறுமதியான பொருளைக் கண்டெடுத்தும் அதனை தன்வசம் வைத்துக்கொள்ளாமல் உரிய நிர்வாகத்திடம் ஒப்படைத்த மாணவி அப்றாவின் செயற்பாடு, நேர்மை, பொறுப்பு மற்றும் மனிதநேயத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது!
செய்திகள்

மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது!

August 11, 2026
Next Post
கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.