Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது; உதய கம்மன்பில

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது; உதய கம்மன்பில

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என தேர்தல் மேடைகளில் கூப்பாடு போட்டவர்கள், சுமந்திரனுடன் இணைந்து பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என கருத்தரங்குகளை நடத்தியவர்கள் இன்று அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த வகையில் பிள்ளையானின் கைது பிழையானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் போது என்ன காரணத்தினால் கைது செய்யப்படுகின்றார் என்பது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கைது செய்யப்படும் நபருக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறான ஆவணங்கள் எதனையும் அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் சட்டத்தரணி என்ற அடிப்படையில் பிள்ளையானை சந்தித்தபோது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அருகாமையில் இருந்து தான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தனர் எனவும் இது சட்ட ரீதியானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சட்டத்தரணி ஒருவர் தனது சேவை பெறுநறுடன் நடத்தும் சந்திப்புக்களை ரகசியமாக பேண வேண்டியது சட்டத் தேவை என்ற போதிலும் இலங்கை பொலிஸார் அதற்கு இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கை பொலிஸ் திணைக்களம் பாரியளவில் அரசியல் மையப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போலிஸாரின் ஒழுக்கம் மிக மோசமடைந்துள்ளது என அவர் வருத்தம் வெளியேற்றுள்ளார் தான் பிள்ளையானை சந்தித்துக் கொண்டிருக்கும் போது குற்ற விசாரணை பிரிவின் அதிகாரியான பாயிம் என்ற நபர் தாம் பிள்ளையானை சந்திப்பது குறித்து தனது சொந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி முகநூலில் பதிவு ஒன்றை இட்டார் எனவும் இவ்வாறான ஒரு சம்பவம் இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்றதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை கொண்டு தாக்குதல் ஜனாதிபதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பிரதான சூத்திரதாரி ஒருவரை ஜனாதிபதி தற்போது தயாரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என குறிப்பிட்டுள்ளதாகவும் இவரை தவிர வேறு ஒருவர் இந்த தாக்குதலில் தொடர்பு பட்டிருக்கிறார் என்பதற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில் தேர்தலில் வாக்குறுதி அளித்ததைப் போன்று தற்பொழுது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஓர் பிரதான சூத்திரதாரியை உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது எனவும் தற்பொழுது அவர் முயலை நரியாக்கியேனும் இவ்வாறு ஓர் சூத்திரதாரியை முன்வைக்க வேண்டி இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
Next Post
பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்

பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.