Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்ற திட்டம்; இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா !

நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்ற திட்டம்; இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா !

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சு பாரிய பங்களிப்புகளை வழங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்காத அரச அதிகாரிகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும், 2048 இல் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அனைவரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் மீனவ சமுதாயத்தின் நலனுக்காக மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு காப்புறுதித் திட்டம், ஓய்வூதியம், சேமிப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களின் மீன் விலை அதிகரித்தமையால் நுகர்வோர் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். மீன் விலை அதிகரிப்புக்கு காலநிலை மாற்றங்களும் காரணமாக அமைந்திருந்தது. அதேபோல் சில வழிபாட்டு நிகழ்வுகள் காரணமாகவும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை. அதனால் போதியளவு மீன்கள் சந்தைக்கு கிடைக்கவில்லை.

2048 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் சாத்தியமடைய வேண்டும் எனில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை சாத்தியமாக்குவதற்காக எமது அமைச்சு அர்பணிப்புடன் செயற்படும்.

பெருமளவான அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றும் போது சிலர் அவர்களை காலை பிடித்து இழுக்கும் நிலைமை காணப்படுகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தடையாகவிருக்கும் அதிகாரிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அந்த தீர்மானத்தை எடுக்காவிடின் மீன்பிடித்துறை சரிவைச் சந்திக்கும். சரிவை சந்திக்கும் பட்சத்தில் அதனை சீரமைக்க நீண்ட காலம் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்; பிமல் ரத்நாயக்க

May 22, 2025
நாடளாவிய ரீதியில் 21 ஆயிரத்தைக் கடந்தத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 21 ஆயிரத்தைக் கடந்தத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

May 22, 2025
ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது
உலக செய்திகள்

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

May 22, 2025
பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்தவர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்தவர் கைது

May 22, 2025
தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக NPP எம்.பிஇளங்குமரன் குற்றச்சாட்டு
அரசியல்

தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக NPP எம்.பிஇளங்குமரன் குற்றச்சாட்டு

May 22, 2025
பிள்ளையானின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்
செய்திகள்

பிள்ளையானின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

May 22, 2025
Next Post
இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.