Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

16 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக ஆக உயர்ந்துள்ளது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா –  கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், உயிரிழந்த 15 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள, அதேநேரத்தில் விபத்தில் உயிரிழந்த சிலரின் உடல்கள் பஸ்ஸின் அடியில் சிக்குள்ளன. 

மேலும் அந்த உடல்களை மீட்க பொலிஸாரும், பிரதேசவாசிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த பஸ்ஸில் சுமார் 75 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் கொத்மலை பொலிஸார், ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்

இரண்டாம் இணைப்பு

ரம்பொட பகுதியில்  இன்று(11) காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் இணைப்பு

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பேருந்தே இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது

விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர
செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர

May 11, 2025
தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

May 11, 2025
9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா
உலக செய்திகள்

9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

May 11, 2025
சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி
செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

May 11, 2025
கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி
செய்திகள்

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

May 11, 2025
ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
செய்திகள்

ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

May 11, 2025
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக அனைவரையும் அழைக்கும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக அனைவரையும் அழைக்கும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.