Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு

19 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி விவகாரத்தில் சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

சில சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் சென்று முறைப்பாடளிக்கின்றனர்.

இதே நிலைமை தொடர்ந்தால் இந்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாது. அரசாங்கம் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக அல்லது ஒரு வருடமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலைமையிலேயே உள்ளது.

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன.

ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்டால் உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகும். என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர
செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர

May 11, 2025
தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

May 11, 2025
9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா
உலக செய்திகள்

9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

May 11, 2025
சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி
செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

May 11, 2025
கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி
செய்திகள்

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

May 11, 2025
ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
செய்திகள்

ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

May 11, 2025
Next Post
“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே”- இன்று உலக அன்னையர் தினம்!

"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே"- இன்று உலக அன்னையர் தினம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.