Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்

கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்

5 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளின் பயணப் பொதிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வஜிர ரத்நாயக்க தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தில் பிரதேச மக்களின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட 35 கையடக்க தொலைபேசிகள், பயணப் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பேருந்து நடத்துனரின் டிக்கெட் புத்தகமும், பணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விபத்து நடந்த நேரத்தில் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்பதை சரியாகக் கூற முடியாது, ஏனெனில் பேருந்து சாரதி இறந்துவிட்டார், நடத்துனர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.


அதன்படி, இந்த டிக்கெட் புத்தகத்தைத் தேடி பொலிஸார், இராணுவம் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடியும், இன்றுவரை அது கிடைக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (11) கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 22 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி
செய்திகள்

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி

May 14, 2025
11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்
உலக செய்திகள்

11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

May 13, 2025
கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை
அரசியல்

கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

May 13, 2025
போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா
உலக செய்திகள்

போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா

May 13, 2025
வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

May 13, 2025
பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

May 13, 2025
Next Post
11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.