தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், பணம் பறிக்கும் நோக்கில் குற்றவாளிகள் மூவரையும் கடத்தி, அவர்களது குடும்பத்தினரிடம் பெரும் தொகை பணம் கோரி மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

மீட்பு நடவடிக்கையின்போது சம்பவத்துடன் தொடர்புடைய சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட மூவரும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










