BMW, Parados உள்ளிட்ட 12 அரசு வாகனங்கள் ரூ.28 மில்லியனுக்கு இரகசியமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றஞசாட்டியுள்ளார்.
வட மத்திய மாகாண சபை நடத்திய வாகன ஏலம் குறித்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரகசிய டெண்டர் செயல்முறை மூலம் ஆடம்பர அரசு வாகனங்கள் வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளன.

22 சொகுசு வாகனங்களில் ஒரு BMW மற்றும் மூன்று டொயோட்டா பிராடோக்கள் உட்பட 12 சொகுசு வாகனங்கள் மொத்தம் ரூ.28 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முன்பு பயன்படுத்திய BMW, அதன் சந்தை மதிப்பு ரூ.15 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தபோதிலும், ரூ.5 மில்லியனுக்கும் குறைவாக விற்கப்பட்டுள்ளது.
மாகாண அதிகாரிகள் பொது சொத்துக்களை குறைத்து மதிப்பிட்டு வெளிப்படைத்தன்மையை பராமரிக்கத் தவறிவிட்டனர்.
இது மட்டுமன்றி சந்தைக்குக் குறைவான விலையில் இதேபோன்ற ஏலங்களுக்கு அதிகமான வாகனங்கள் தயாராகி வருகின்றன.- என்றார்