மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கலை மற்றும் இலக்கியத் துறையில் நீண்டகால பங்களிப்பை வழங்கியுள்ள ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், தனிப்பட்ட காரணங்களாலும், குறிப்பாக தனது வயதை கருத்தில் கொண்டும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான தனது நம்பிக்கை தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும், எதிர்காலத்திலும் அவர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும் தனக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும், தனது பதவி விலகல் முற்றிலும் தனிப்பட்ட முடிவு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரத்ன ஸ்ரீ விஜேசிங்கவின் பதவி விலகல் எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







