2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, நாளை (31) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தின் கீழ், 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி, இரண்டு கட்டங்களிலும் மொத்தமாக 698,962 பயனாளிகளுக்கு 3,494,810,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான கொடுப்பனவை ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








