தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இலக்கம் 12 மாட்டிறைச்சி கடைக்குரிய ஏலத்தின் போது ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அசோக சேபால கைதுசெய்யப்பட்டுள்ளார்.