அரச வாகன விற்பனை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுகளை வடமத்திய மாகாண சபை முற்றாக மறுத்துள்ளது.
திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறானவை ஆகும்.*

அரச வாகனங்கள் முறையான ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டன.
தயாசிறி ஜயசேகர கூறுவது போன்று இரகசிய ஏலம் மூலம் அரச வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டவில்லை.
சர்ச்சைக்குரிய சொகுசு (BMW ) காரானது அரசாங்கத்தால் மதிப்பிடப்பட்ட மதிப்பை விட 21.8 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரசாங்கத்துக்கு 123 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்தது.
அரச வாகன விற்பனை தொடர்பில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.