Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஜித் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்; ரவூப் ஹக்கீம்

சஜித் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்; ரவூப் ஹக்கீம்

2 days ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கும். என தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட இணைப்புக்குழுவில் கலந்து கொண்ட பின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சஜித் ரணில் இணைவதைத் தடுக்க இரு கட்சிகளிலும் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அறியவருகிறது. ரவி கருணாநாயக்க அறிவித்த இரண்டு முக்கிய நபர்களுக்கு மேலதிகமாக, அவர்களைச் சுற்றி ஒரு குழு இருப்பதாகவும், அவர்களில் ரவி கருணாநாயக்கவும் இருக்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்பது எனது கருத்து. இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும். ஆகவே, அடுத்த தேர்தலுக்கு முன்பு இந்த இணைப்புக்கான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பது முக்கியமாகும்.

சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ள சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியிற்கு எங்கள் ஆதரவை வழங்குவது குறித்து நாங்கள் முதன்மையாக பரிசீலித்து வருகிறோம்.

மேலும் இது உண்மையில் திருவுபடுத்திய வாக்குப்பதிவு முறையின் கீழ் பல உள்ளூராட்சி நிறுவனங்களில் எழுந்துள்ள ஒரு பிரச்சினையாகும். அத்தகைய சபைகளில் அதிகாரத்தை நிறுவுவதில் உள்ள சிக்கல்களைக் குறைக்க ஆளும் கட்சியின் பிராந்தியத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதைத் தவிர, தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசின் தலைவர்களுடன் நாங்கள் இன்னும் எந்தவொரு கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எங்களிடம் அதிக உறுப்பினர்கள் உள்ள சபைகளில், சில நேரங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு
உலக செய்திகள்

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

June 6, 2025
மோட்டார் திணைக்களத்தின் மீதான இலஞ்ச வழக்கின் சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவிப்பு
செய்திகள்

மோட்டார் திணைக்களத்தின் மீதான இலஞ்ச வழக்கின் சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவிப்பு

June 6, 2025
பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா

June 6, 2025
Next Post
ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் பலி

ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.