ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் அமெரிக்கா தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் அவரது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இப்பதிவில் மேலும் கூறியதாவது,
“ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்கள் மிக வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம்,” என்று டிரம்ப் இன்று (22) சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.”
“அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மை தளமான ஃபோர்டோ மீது முழு வெடிகுண்டு சுமையும் வீசப்பட்டது. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. எமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். இதைச் செய்யக்கூடிய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஈரானுடன் நேரடி ஆயுத மோதலில் ஆழ்த்துகிறது, இது தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கி அதன் ஆட்சியைக் கவிழ்க்கும் இஸ்ரேலின் முயற்சியில் அதன் ஈடுபாட்டில் ஒரு பெரிய அதிகரிப்பு ஆகும்.








