யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று முற்பகல் 10.10 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் செய்தியாளர்களிடம் போராட்டத்தின் நோக்கம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.






மக்கள் செயல் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொண்டார்.
இதேவேளை, செம்மணி மனிதப்புதைக்குழிக்கு வலுசேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டமானது இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.








