தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (02) நாடு முழுவதும் ஆய்வுகள் தொடரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (01) 22,294 இடங்களில் சோதனை செய்யப்பட்டதுடன் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டன.
நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 553 வளாகங்கள் சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த இரண்டு நாட்களில் 48,354 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 10,591 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
மேலும், 1,611 வளாகங்களில் நுளம்பு இன்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1,193 சிவப்பு அறிவிப்புகளும் 256 சட்ட நடவடிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.








