Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருந்தூரில் தமிழர்கள் வழிபாடு செய்தது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்; கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை!

குருந்தூரில் தமிழர்கள் வழிபாடு செய்தது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்; கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூசையாக இருக்க வேண்டும் என குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையை ஒருபோதும் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் ,

” முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் இதனை நாம் தவறான தீர்மானமாகவே கருதுகிறோம். சம்பிரதாய ரீதியான இந்து மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள்.

வடக்கு மாணத்தில் சிங்கள மக்கள் வாழ்வதை விரும்பாத தரப்பினர் விகாரையின் கட்டுமானப்பணிகளை எதிர்த்தனர். இவ்வாறான இனவாதத்தை தூண்டும் தரப்பினரே இன்று பொங்கல் வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் நாம் இதற்கு இடையூறு விளைவிக்காதிருந்தோம். எனினும், இங்கு நடைபெறும் இறுதி பூசையாக அல்லது நிகழ்வாக இது இருக்க வேண்டும்.

குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புக்களையும் சவாலுக்குட்படுத்தி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம். இந்த பிரச்சனையை மேன்முறையீட்டு நீதிமன்றில் தீர்த்துக் கொள்ள நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

இந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

இது இலங்கையின் சொத்து. இதன் உண்மையான உரிமையாளர்கள் பௌத்தர்களே. இவற்றை பாதுகாக்கவும் இதன் பயனை பெற்றுக் கொள்ளவும் அனைவருக்கும் உரிமையுண்டு. எனினும், இது பௌத்தர்களுக்கானது.அந்த உரிமையை எவராலும் பறிக்க முடியாது.” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மாதந்தோறும் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து மக்களையும் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
Next Post
டி-56 ரக துப்பாக்கியுடன் பயிற்சி நிலை படை வீரர் மாயம்!

டி-56 ரக துப்பாக்கியுடன் பயிற்சி நிலை படை வீரர் மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.