ஜே.வி.பி அரசாங்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முறைக்கு நூறுவீதமான ஆதரவை தெரிவிப்பதுடன் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் இல்லாத முறையில் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றால் அதற்கு நான் சலூற் அடிப்பேன் அதேவேளை எதிர் காலத்திலே பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சனையை எதிர் நோக்குவார்கள் என முன்னாள் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்
மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் நேற்று (19) இடம்பெற்று ஊடக மாநாட்டில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தவிசாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர் அலியிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்
தற்போது உள்ள அரசாங்கம் எல்லோரையும் பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் கள்வர்கள் என்றும் ஊழல் என்ற நமத்தை மிக இலகுவாக பேசிவிட முடியும் ஆனால் அப்படி குற்றம் சுமத்தப்பட்டவர் எதிர் கேள்வி கேட்கின்ற போது அங்கு பிரச்சனை வருகின்றது அதற்கான ஆதாரங்களை கேட்கும் போது பிரச்சனை வருகின்றது.

ஆட்சியை பிடிப்பதற்காக கடந்த காலத்தில் பெற்றோல் விலையை குறைப்போம் 12 இலச்சத்துக்கு காரை கொண்டுவருவோம் என பல விடையங்களை எதை எதை எல்லாம் தருவோம் என தெரிவித்தனர். ஆனால் இதை எல்லாம் எதிர்கட்சியே அல்லது எதிர் தரப்பில் இருக்கின்ற போது அழகாக பேசமுடியும் இருந்தபோதும் அவர்கள் நினைக்கவில்லை ஆளும் தரப்பாக வருவோம் என்ற உணர்வோடு பேசியதாக இல்லை
முகநூலை நம்பிய அரசியல்வாதி நான் அல்ல முகநூல் விற்பனர்களுக்கு மாதாந்தம் கட்டணம் செலுத்தி அரசியல் செய்கின்ற அரசியல்வாதியும் நான் அல்ல? நான் இப்போது இருக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் மட்டுமல்ல கட்சியின் ஆரம்ப கரத்தாக்களில் நானும் இருக்கின்றேன்
எனவே முகநூல்களிலும் ஊடகங்களிலும் பேசப்படுவதாக அறிகின்றேன் உண்மையும் கூட இது கால காலம் எமது பிரதேசத்தில் வருகின்ற ஒரு விடையம் இந்த கால கட்டத்தில் கல்குடா பிரதேசத்தினுடைய அரசியல் சற்று கூடியிருக்கின்றது.
அந்த மோகத்தின் அடிப்படையில் சில நலன் விரும்பிகள் சில எதிரிகள் அல்லது அரசியலில் சில மாற்றம் வரவேண்டும் என எதிர் பார்க்கின்றவர்களின் எதிர் பார்ப்புக்களையும் எழுத்துக்களையும் கோரிக்கையாக வைக்கின்ற சிலருடைய ஜனநாயக விடையம் அவ்வாறு அந்த எதிர்பார்ப்புக்காக அவருக்கு மனப்பூர்வமான நன்றிகள்
என்மீது இருக்கின்ற நம்பிக்கையில் சொல்லுகின்றனர் நான் இந்த கட்சியின் தவிசாளர் இந்த கட்சியை இன்னும் சுமந்த தோள்கள் வலித்துக் கொண்டுதான் இருக்கின்றது எனவே அந்த வலியை தொடர்ந்து தாங்கி கொள்ள வேண்டும் என என்னிடம் இருக்கின்றது.
எனவே கட்சியை விட்டுவிட்டு வேறு நோக்கத்துக்காக செல்வதற்கு தயாராக இல்லை ஆகவே சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் எனது நல விரும்பிகளாக செயற்படுகின்றவர்களுக்கும் நான் கட்சியின் தவிசாளர் ஆரம்ப கர்த்தா எனக்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவே கட்சியின் பணியை தொடர்ந்து செய்வேன் என மிகவும் திட்டவட்டமாக கூறுகின்றேன்.
அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எனக்கும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான றவூவ் ஹக்கீம் ஆக இருக்கலாம் அதனேடு சார்ந்த எந்த தலைவரோடும் எந்த இரகசிய சந்திப்பும் செய்தது கிடையாது அப்படி ஒரு அழைப்பு வந்ததும் இல்லை நான் ஒரு தெளிவான அரசியல் பார்வை கொண்டவன் எதற்கும் தையிரியமாக பேசி செயற்படுகின்ற அந்த மனோபக்குவமும் மனோநிலையும் இருக்கின்றது எனவே அவ்வாறு பேசுவதற்கான தேவைப்பாடு இல்லை அவ்வாறு இரகசியமாக பேசவில்லை என்றார்.








