Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெயலலிதாவின் வழியில் பயணிக்கப்போவதாக கூறிய அ. தி. மு. க!

ஜெயலலிதாவின் வழியில் பயணிக்கப்போவதாக கூறிய அ. தி. மு. க!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கச்சதீவை மீட்பதற்கு ஜெயலலிதாவின் வழியில் அ. தி. மு. க. தொடர்ந்து போராடும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.மதுரையில் அ. தி. மு. க. எழுச்சி மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இலட்சக் கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில்,
பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அ. தி. மு. க. மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி. 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சி. எம். ஜி. ஆர். 1972இல் தொடங்கிய அ. தி. மு. க. 51ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அ. தி. மு.கவை தொடங்கிய 6 மாத காலத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம். ஜி. ஆர். அவரின் முகத்தை பார்த்தாலே போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். அப்படி மக்கள்
சக்தி பெற்ற கட்சியாக அ. தி.மு. கவும், அதன் தலைவர்களும் திகழ்ந்தனர். எம். ஜி. ஆர். மறைந்த பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று கருணா நிதி கனவு கண்டார். ஆனால், அ. தி. மு. க. அழியவில்லை.

ஒருபோதும் அ. தி. மு. கவை அழிக்க நினைக்காதீர்கள். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
தி. மு. க. ஆட்சியில்தான் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் தி. மு. க.அமைச்சர்கள் 13 ஆண்டு காலம் இருந்தனர். அப்போது கச்சதீவை மீட்க முயற்சி எடுக்கவில்லை. கடந்த 18ஆம் திகதி
முதல்வர் ஸ்டாலின் இராமேஸ்வரம் சென்று கச்சதீவை மீட்போம் என்கிறார். ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை மீட்க போராடினார். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் வழியில் நின்று கச்சதீவை மீட்கத் தொடர்ந்து போராடுவோம்.

தமிழகத்தில் தற்போது சட்டம் – ஒழுங்கு அடியோடு கெட்டுப்போய் உள்ளது. திமுகவின் 2 ஆண்டுஆட்சியில் பின்னடை வைதான் பார்க்கிறோம். அ. தி. மு. க. மாநாட்டில் 15 இலட்சம் தொண்டர்கள் மக்கள் பங்கேற்று
வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
13ஐ காட்டி கிழக்கின் முக்கிய பகுதியை அதானி குழுமத்திற்கு விற்க ஏற்பாடு; சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு!

13ஐ காட்டி கிழக்கின் முக்கிய பகுதியை அதானி குழுமத்திற்கு விற்க ஏற்பாடு; சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.