அரசியலமைப்பு சபை இன்று (07) பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.
இதேவேளை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று (06) அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை அண்மையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்துக்கு ஆதரவாக 177 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இதனையடுத்து, இது தொடர்பிலான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்று (06) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டது.
தொடர்ந்து தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கக் கடிதம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடிதமானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








