Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 25 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையுடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், பரிசோதகர் எஸ். சந்திமா தலைமையிலான குழுவினர் மாறுவேட கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்போது கருவப்பங்கேணி அம்புரோஸ் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 24 வயது இளைஞன், அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 34 வயது ஆண் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயது பெண் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தற்போது இதே குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபோது, கருவப்பங்கேணியைச் சேர்ந்த மற்றொரு போதை வியாபாரியுடன் தொடர்பு ஏற்படுத்தி, பிணையில் வெளிவந்த பின்னர் இணைந்து வியாபாரம் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
செய்திகள்

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

June 24, 2026
தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!
செய்திகள்

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

June 24, 2026
Next Post
இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.