பலாங்கொடை மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (09) இரவு தீ விபத்து ஏற்பட்டதில், அங்கு இருந்த எட்டு வயது சிறுவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்தார்.
பலாங்கொடை பொலிஸ் தெரிவிப்பில், சிறுவனின் தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறும், மனைவி திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் ஈடுபட்டிருப்பதும் முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. சம்பவம் நிகழும் முன்பு மனைவி வேறொருவரைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கணவரும் அவரைக் தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில் வீட்லே எட்டு வயது சிறுவன் மட்டும் இருந்தபோது, அதிகாலை வீடு தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அயலவர்கள் தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில், இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை போலீசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.








