கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) புதன்கிழமை அவர், பதில் வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹாரீஸிடமிருந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீண்டகாலம் அத்தியட்சகராக பணியாற்றிய வைத்தியர் ஏ.எல்.எம்.எப். ரஹ்மான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
பொறுப்பேற்பு நிகழ்வில், திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.எல். பாரூக், மருத்துவ அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்திய நிபுணர்கள், தாதிய பரிபாலகர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கணக்காளர், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

















