காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றம் நடாத்திய சித்திரப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் எட்டாவது நிகழ்வு நேற்று முன்தினம் (08) காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
“புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” எனும் தொனிப்பொருளில் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மன்றத் தலைவர் ஜாஹிதா ஜலால்தீன் சான்றிதழ்களை கையளித்தார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.









