கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.

இதேபோல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தாம் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு நேற்று (10) வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்யும் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதையடுத்து, சபாநாயகர் அதனை உடனடியாக சான்றுரைப் படுத்தியிருந்தார். இதன் மூலம் குறித்த சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் தங்கியிருந்த இல்லங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விரைவில் விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








