உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் தன்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக அமைதியே தனது இலக்கு எனவும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த 8 மாதங்களில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாகவும் 7 முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.








