Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது, கிரிதலே 3 ஆவது கவச புலனாய்வுப் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினரான சுமதிபால சுரேஷ் குமார் என்ற ‘முரளி’, அந்த முகாமில் இருந்த நான்கு இராணுவ அதிகாரிகளை திறந்த நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளார்.

சாட்சியமளித்த சுமதிபால சுரேஷ் குமார், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கிரிதலே இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சாட்சியமளித்ததுடன், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் 1 ஆம் குற்றவாளி முதல் 4 ஆம் குற்றவாளி வரையிலான நபர்களும் ஏனையோரும் அந்த முகாமில் இருந்ததாகத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி கடத்தப்பட்டமை தொடர்பாக 7 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்டமா அதிபர் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

ஏக்னலிகொட 2009 ஆகஸ்ட் 27 அன்று கடத்தப்பட்டு வழியில் இறக்கிவிடப்பட்டதுடன், பின்னர் 2010 ஜனவரி 24 அன்று கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார். 2010 ஜனவரி 24 அன்று ஏக்னலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. தான் கிரிதலே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இராணுவ அதிகாரிகள் தொலைபேசியொன்றை வழங்கி, அவர்கள் தரும் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்துமாறு பணித்ததாகவும், அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர் என்றும், 2010 ஜனவரி 24 அன்று ஏக்னலிகொடவிற்கும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் சுமதிபால குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
Next Post
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.