வியட்நாமில் ப்யாலோய் (Bualoi) புயலில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், இந்த அனர்த்தம் காரணமாக 250,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, பிலிப்பைன்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ப்யாலோய் (Bualoi) புயல் காரணமாக பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த புயலில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








