மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜன்ட் சம்பத், பெண் பொலிஸ் சார்ஜன்ட் லோஜினி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சந்திமால் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிதிகளாக கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் M.A. ஹலீம் இஸ்ஹாக், உப அதிபர் A.G. அஸீஸுல் றஹீம் மற்றும் தரம் 7ற்கான பகுதித் தலைவர் M.L.M. நஜீம் கலந்து கொண்டனர்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.












