Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கைக்குள் வர பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கைக்குள் வர பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்துடன் இலங்கையின் நீர் நிலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ‘ஷி யான் 6’ எனும் சீன கடல்சார்
ஆய்வு கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.நாரா நிறுவனம் மற்றும் வெளி
விவகார அமைச்சின் கோரிக்கைக்குஅமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இராணுவ மற்றும் கடற்படையின் போர்க்கப்பலான ஹாய்யங் 24 ஹோ கடந்த 10ஆம் திகதி
கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்ததுடன், 12 ஆம் திகதி வரை இரண்டு நாட்கள் இலங்கை
கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்தது.

இதேநேரம், 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சீனாவின் கடற்படை கப்பலொன்று அம்பாந்
தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்ததுயுவான் வாங் 5 எனும் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை வழங்கிய அனுமதி தொடர்பில் இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.

அத்துடன், இந்தியாவை உளவுபார்க்கும் நோக்கிலேயே குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதாக இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.இந்த பின்னணியிலே, ‘ஷி யான் 6’
எனும் கடல்சார் ஆய்வு கப்பலை இலங் கையில் தரித்துவைப்பதற்கு சீனா கடந்த வருடம் அனுமதி கோரியிருந்தது.

60 பேரைக் கொண்ட ‘ஷி யான் 6’ எனும் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலானது கடல்சார்வியல், கடல் புவியியல்
மற்றும் கடல் சூழலியல் சோதனை நடவ டிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த கப்பல் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிட
திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்திய பெருங்கடலில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருதல் மற்றும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் இந்தியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.இதனிடையே, இலங்கைக்கு அழுத் தம் கொடுப்பதற்காக பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டுவது சில நாடுகளுக்கு முற்றிலும் நியாயமற்றது என சீன தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
Next Post
மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.