மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டிட நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.
ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் பூசகரின் தலைமையிலும் இடம்பெற்ற இந் நிகழ்வில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் , இந்து மதகுருமார், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் , செங்கலடி பிரதேச சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , சமூக சேவகரும் முன்னாள் பி.சபை உறுப்பினருமான திரு.மோகன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் , பொது மக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலய பூஜையினைத் தொடர்ந்து சுபமுகூர்த்த வேளையில் இந்து மதகுருமார் , மற்றும் அதிதிகள், ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் ஆகியோரினால் அடிக்கல் நடும் மங்கல நிகழ்வு இடம்பெற்றது.



























