Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவீரர் தினத்தை முன்னிட்டு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்ட துப்புரவு பணிகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்ட துப்புரவு பணிகள்

8 months ago
in மட்டு செய்திகள்

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் துப்புரவு செய்யும் பணிகள் தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தரவை மாவீரர் துயிலுமில்ல நிர்வாகத்தின் உபதலைவர் பூ.மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இத்துப்பரவுப் பணியில் குறித்த நிர்வாகத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

துப்பரவுப் பணி ஆரம்பத்தில் மாவீரர் ஒருவரின் தாயாரினால் நினைவுச் சுடரேற்றப்பட்டு, வருகை தந்தவர்களால் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினர், ”குறித்த துயிலுமில்லங்களை யாரும் நிதி திரட்டும் செயற்பாடுகளாக மாற்ற வேண்டாம்.

இது மாவீரர் தாய்மார், அவர்களின் குடும்பங்களுக்கான விடயங்கள் இதனை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எனவே மற்றவர்கள் இதனை வைத்து தங்கள் நிதி திரட்டல்களை மேற்கொள்ளாதீர்கள்.

இவர்களுக்கு நிதிவழங்குபவர்களும் இதனை நிறுத்த வேண்டும். இது இதயபூர்வமாகச் செய்கின்ற விடயம். இதனை காசாக மாற்ற வேண்டாம். அத்துடன் இங்கு யாரும் வரலாம் இது யாரும் தனித்து உரிமை கொண்டாடும் விடயமல்ல. அனைவரும் வரலாம் ஆனால் இதனை அரசியலாக்க வேண்டாம்.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு எமது மாவீரச் செல்வங்களுக்காக தங்கள் அஞ்சலியினை செலுத்த இதயபூர்வமாக வருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
செய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

June 14, 2026
மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
காணொளிகள்

மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

June 14, 2026
சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

June 13, 2026
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!
மட்டு செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

June 13, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
Next Post
மெக்சிகோவில் ரேமண்ட் புயல் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.