இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.








