Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோல் வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் 5 பேர் பாதிப்பு – நிபுணர் எச்சரிக்கை

தோல் வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் 5 பேர் பாதிப்பு – நிபுணர் எச்சரிக்கை

11 months ago
in செய்திகள்

வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் ஐவர் சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சருமநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் இந்திரா கஹாவிட்ட (Indira Kahawita) இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சட்டங்கள் கடுமையாக்கப்படாததால் பலர் இவ்வாறான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறெனினும் சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர்கள் முறைப்பாடளிக்க முடியும்.

முறையான அனுமதி மற்றும் தர நிர்ணயம் இன்றி ஒருவரின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றச்செயலாகவே கருதப்படுகிறது என்றார்.

சமூகத்தில் அதிகரித்துள்ள சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனை தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சமீபகாலமாக பெண்களிடையே சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு மற்றும் ஊசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மாத்திரமல்ல எந்தவொரு நாட்டிலும் இந்த ஊசிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவை சிக்கலான சருமநோய்கள் மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

இளம் பருவத்தினர் முதற்கொண்டு வயது வந்த பெண்கள் வரை சரும களிம்புகளை உபயோகிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆண்களும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளனர்.

அரச வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் 5 பேர் தோலை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!

September 19, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
Next Post
புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.