Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹமாஸ் ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல்; இஸ்ரேல் அச்சுறுத்தல்

ஹமாஸ் ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல்; இஸ்ரேல் அச்சுறுத்தல்

8 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க ஆதரவுடன் காசாவின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை ஹமாஸ் மதிக்கவில்லையென்றால், மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிக்கப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

ஹமாஸ் மேலும் இரண்டு இறந்த பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த பின்னர், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸின் அலுவலகத்திலிருந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் சிறப்பு உபகரணங்கள் இல்லாமல் காசாவின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுக்க முடியாதுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையிலேயே இஸ்ரேலின் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், பாலஸ்தீன ஹமாஸ் குழு இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2,000 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக 20 உயிருடன் இருந்த பணயக்கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது.

அத்துடன் தமது தடுப்பில் இறந்ததாக கூறப்படும் 28 பணயக்கைதிகளில் 9 பேரின் உடலங்களை இதுவரை ஒப்படைத்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் தனது காவலில் இருந்த மேலும் 45 பலஸ்தீன உடல்களை தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு மாற்றியது, இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட உடல்களில் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் திட்டத்தின் கீழ், இறந்த ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் பதிலாக 15 பலஸ்தீன இறந்தவர்களை இஸ்ரேல் திருப்பியனுப்புகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்
செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

June 24, 2026
கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது
செய்திகள்

கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது

June 24, 2026
வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்
செய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்

June 24, 2026
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
Next Post
மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.