பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த நெப்போலியனின் வைர நகைகள் நேற்று (19) கொள்ளையடிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அருங்காட்சியகத்தில் நேற்று வழக்கம்போல சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொருட்களை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நுழைந்த கொள்ளையர்கள், நெப்போலியனின் 9 வைர நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் விரைந்து சென்று தப்பித்து சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.








