மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது கல்லூரி அதிபர் திரு.K.பகீரதன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் (06) நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக இயேசு சபை துறவி அருட்பணி சொலமன் அடிகளார், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்பு துறவி ஜெகதாஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருத்ததுடன், ஒளிவிழாவினை முன்னிட்டு குறித்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தனர்.
மேலும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடனம், நாடகம் கரோல் கீதம் என்பன அரங்கேற்றப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றன.
நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








