உன்னிச்சை வீதியில் புதிதாக பொருத்தப்பட்டிருந்த ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர்பலகையை அகற்றுவதற்கான ஆலோசனை வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
அத்துடன் “உன்னிச்சை வீதி” என்ற புதிய பெயர்பலகையை நடுவதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பாக தனது கவனத்துக்கு கொண்டுவந்த கிராம மக்கள், விவசாய அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.









