Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பதில் நீதிபதி – பிணை நின்றது யார்; கேள்விகள் எழுப்பும் அம்பிட்டிய தேரர்

சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பதில் நீதிபதி – பிணை நின்றது யார்; கேள்விகள் எழுப்பும் அம்பிட்டிய தேரர்

7 months ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான், தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறைச்சாலைக்குள் இருந்து வெளியில் வந்து தாக்குதலை நடத்தினார் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குண்டுத் தாக்குதலின் பின்னரே அவர் தொடர்பான காணொளிகளை பார்க்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார். சஹ்ரானை சிறைப்படுத்த தீர்ப்பளித்த மட்டக்களப்பு நீதிபதி பின்னர் விடுமுறையில் செல்கிறார்.

அவர் விடுமுறையில் சென்ற இரண்டு நாட்களின் பின் அவருக்காக பதில் நீதிபதி சேவையில் இருந்தார்.அப்போது அவருக்கு பிணை வழங்கியது யார்?பிணை நின்றது யார்? ஏன் பரிசோதனை நடத்தவில்லை.பிணை வழங்கிய பின்னர் சஹ்ரான் எங்கு சென்றார் என்பது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.

தாக்குதலின் பின்னர் அவர் வெளியிட்ட காணொளி நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கையில் ISIS இருப்பதாக தெரியவந்தது.

நான் மட்டக்களப்பில் 35 வருடங்களாக இருக்கிறேன்.தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இருந்ததால் இவை ஒவ்வொன்றும் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.

சஹ்ரான் தனது போதனைகளுக்காக முதன் முதலில் காத்தான்குடியில் தனக்கான தளத்தை அமைத்து கொண்டு முஸ்லிம் மக்களை திரட்டும் போது நான் இது தொடர்பில் தெரிவித்தேன்.

அன்று சில ஊடகங்களில் இவை செய்திகளாக சென்றன. நீண்ட காலம் கடந்துள்ளதால்,அதாவது ஆறு வருடங்கள் கடந்து விட்டதால் சில சம்பவங்கள் ஞாபகமில்லை. பொலிஸ் புலனாய்வு திணைக்களத்திற்கு அன்று நான் வாக்குமூலம் வழங்குவதாக கூறினேன்.

என்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தேன்.ஆனால் யாரும் எனக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை.அன்று நாங்கள் கத்தி கத்தி சொன்னோம் இவ்வாறான குழுக்கள் உருவாவதாக, ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதை கணக்கிலும் எடுக்கவில்லை என்றார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம்

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.