Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் போதைப்பொருள் பாவனை வன்முறைகள் விரைவில் முடிவுக்கு; கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை- என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

வடக்கில் போதைப்பொருள் பாவனை வன்முறைகள் விரைவில் முடிவுக்கு; கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை- என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

2 years ago
in முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். செங்குந்தா இந்து கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வினை அடுத்து உரையாற்றிய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார். ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவுகட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் அனுசரணையுடன் நொதேண் விளையாட்டு கழகம் நடாத்தியமரபியல் பொங்கல் விழா, செங்குந்தா இந்து கல்லூரி மைதானத்தில் (18) நடைபெற்றது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் K.P. மஹிந்த குணரத்ன, 512 ஆவது பிரிகேட் கட்டளை தளபதி பிரிகேடியார் L.G.J.N. ஆரியதிலக, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ. இளங்கோவன், வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் மற்றும், பிரதேச செயலர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந் து கொண்டனர். வாலை அம்மன் சனசமூக நிலையத்திலிருந்து விருந்தினர்கள் மரபியல் பண்பாட்டோடு அழைத்து வரப்பட்டு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஜனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முடிவுகட்டப்பட வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது
செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

May 12, 2025
வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
செய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

May 12, 2025
முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

May 12, 2025
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி
உலக செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி

May 12, 2025
Next Post
காத்தான்குடி அரபுக் கல்லூரியிலிருந்து கலாசாலைகளுக்கு தெரிவானோருக்கு கௌரவம்!

காத்தான்குடி அரபுக் கல்லூரியிலிருந்து கலாசாலைகளுக்கு தெரிவானோருக்கு கௌரவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.