ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்ட ஹப்புத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நிலம் வழங்கப்பட்டதோடு, குத்தகை நிபந்தனைகள் மீறப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2.0234 ஹெக்டேயர் (சுமார் 5 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட இந்த நிலம், 2023 மே 24 அன்று 30 வருட கால குத்தகை அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு ஏக்கர் சுமார் ரூ . 50,000 என்ற அடிப்படையில் இந்தக் குத்தகை வழங்கப்பட்டது.
எனினும், குத்தகை உடன்படிக்கையின் நிபந்தனைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீறியதையடுத்து, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு அந்த ஒப்பந்தத்தை அண்மையில் இரத்து செய்து காணியை மீண்டும் கையகப்படுத்தியுள்ளது.
தியலும நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களை எளிதில் சென்றடையக்கூடிய அதிக சுற்றுலா ஈர்ப்புமிக்க ஒரு பகுதியிலேயே இந்தக் காணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








