Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாநகரசபையில்பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

மட்டு மாநகரசபையில்பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

1 day ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இதன்போது சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகரசபை அமர்வில் இன்றைய அரசாங்கத்தினால் பல வீதிகளை காபட் வீதியாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை வீதியை வீதி அபிவிருத்தி திணைக்களம்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரசபை ஊடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரஜா சக்தி என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இதன்போது குறுக்கிட்டு தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் வறுமையினை ஒழிக்கும் வகையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்தே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு பிரஜா சக்தி திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் நலன்சார்ந்த அமைப்பு என்றால் அனைவரும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த திட்டம் மக்களின் வறுமையினை ஒழிக்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லையெனவும் இதற்கு அனைவரது செயற்பாடுகளும் உள்வாங்கப்படும் எனம் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமர்வில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள அரசைபாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநகரசபையின் உறுப்பினர் ஜெயக்குமாரினால் இது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டிய அவசியம் தொடர்பில் உரையாற்றப்பட்ட நிலையில் இது தொடர்பிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

ஜனநாயகத்தினையும் கருத்து சுதந்திரத்தினைம் பாதிக்கும் வகையிலான சட்டங்களை கொண்டுவருவதை அனுமதிக்கமுடியாது என உறுப்பினர்கள் இதன்போது உரையாற்றிய நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டுவரமுடியும் என தெரிவித்த நிலையில் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!
செய்திகள்

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

March 7, 2026
மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி
செய்திகள்

மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

March 6, 2026
மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

March 5, 2026
14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!
செய்திகள்

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

March 5, 2026
மட்டக்களப்பில் நுண்கடன் தொல்லையால் பலர் தற்கொலை
அரசியல்

மட்டக்களப்பில் நுண்கடன் தொல்லையால் பலர் தற்கொலை

March 4, 2026
மட்டக்களப்பில் குறையும் டெங்கு தாக்கம்; 870 வீடுகளில் அதிரடி சோதனை
செய்திகள்

மட்டக்களப்பில் குறையும் டெங்கு தாக்கம்; 870 வீடுகளில் அதிரடி சோதனை

March 4, 2026
Next Post
ஈரானியப் படைகள் சரணடையா விட்டால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானியப் படைகள் சரணடையா விட்டால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.