மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவத்தின் 7ஆம் நாள் உற்சவம் நேற்று (28) பக்தி பூர்வமான சூழலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
7ஆம் நாள் உற்சவத்தை முன்னிட்டு நாவலடி ஊர் பூஜை சிறப்பாக நடைபெற்றதுடன், திராய்மடு ஆத்தியடி விநாயகர் ஆலயத்திலிருந்து காவடி மற்றும் பறவைக்காவடிகள் பக்தர்களால் எடுத்து வரப்பட்டன. பின்னர், ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஆன்மிக ஊர்வலம் முருகன் ஆலயத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் சமய வழிபாடுகள் மரபு முறைப்படி நடைபெற்றன. இந்த உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்து வழிபட்டனர்.
உற்சவ நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், பக்தர்களின் பக்திப் பரவசத்தால் ஆலய வளாகம் ஆன்மிக உணர்வால் நிறைந்திருந்தது.



























