அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், ட்ரம்ப் நீரிணையை திறக்க வேண்டும். நான் ஹோர்முஸை கூறினேன் என பேசியதும் கூட்டத்தில் இருந்து சிரிப்பலை எழுந்தது.
அவர் தொடர்ந்து, மன்னிக்கவும். அது ஒரு பயங்கர தவறு. நான் தவறுதலாக கூறி விட்டேன் என பொய்யான செய்தி வெளிவரும். தற்போது தவறுதலாக நான் எதுவும் கூறவில்லை. அதிக அளவிலும் இல்லை என்றார். இதனால், வருங்காலத்தில் ஹோர்முஸ் நீரிணைக்கு பதில், அது ட்ரம்ப் நீரிணை என அழைக்கப்படும் என்பதே உண்மையான செய்தி என குறிப்பிடுவது தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பேசும்போது, நானும் அயதுல்லாவும் இணைந்து அந்த ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம். அதற்கான சாத்தியம் உள்ளது. போருக்கான ஒரு தீர்வாக இது இருக்கும் என கூறினார். அதன்பின்னர் அவர், ஒப்பந்தத்திற்காக ஈரான் எங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறது என ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரானோ, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறுகிறது.








