இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்திய வம்சாவழி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகள் குறித்து தலைவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
குறிப்பாக, டித்வா புயலுக்கு பின்னரான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட அமெரிக்க டொலர் 450 மில்லியன் பெறுமதியான உதவி தொகை முக்கியமாக பாராட்டப்பட்டது.








